மகன் கைது செய்யப்பட்டதால் உயிரை மாய்த்துக்கொண்ட தாய்..!

பொலிஸாரால் மகன் கைது செய்யப்பட்டமையினால் தாய் ஒருவர் மனவேதனையடைந்து தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச்சம்பவமானது குருணாகல் மாவ பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.44 வயதுடைய தாயொருவரே இவ்வாறு உயிரினை மாய்த்துக்கொண்டுள்ளார்.

குறித்த பெண்ணின் மகன் மேலும் மூன்று நபர்களுடன் இணைந்து ஒரு நபரை தாக்கியதாகவும் ,இதனால் குறிப்பிட்ட இளைஞனை கைது செய்து பின்னர் மாவநீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு விடுவித்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மகன் கைது செய்யப்பட்டமையினால் குறித்த பெண் உயிரை மாய்ந்துக்கொண்டதாகவும்,சட்டத்திற்கு ஏற்பவே அவரது மகன் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *