நடனமாடிய யுவதி திடீர் மரணம்…!

திருமண விழாவில் நடமாடிக்கொண்டிருந்த யுவதி திடீர் என வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

25 வயதுடைய மஞ்சரி ஆதித்ய பெர்ணான்டோ என்ற யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த யுவதி ஹொரனை பதுவிட்ட பிரதேசத்தில் அமைந்திருக்கும் தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக இருக்கின்றமை குறிப்பிடதக்கது. தான் பணி புரியும் நிறுவனத்தில் இருக்கும் ஒருவரின திருமண நிகழ்வில் கலந்துக்கொண்டு இரு யுவதிகளுடன் நடமாடிய நிலையில் சிறு நேரத்தை விட்டு வெளியேறிய நிலையில் சகயீனமுற்றுள்ளார்.இதனையடுத்து ஹொரனை பிரதேசத்தில் அமைந்திருக்கும் தனியார் வைத்திய சாலைக்கு காரில் அழைத்து செல்லப்பட்டுள்ளார்.
இதனையடுத்து வைத்திய சாலையில் பரிசோதனை செய்த போது அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றமை குறிப்பிடதக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *