ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் பிறப்பு..!

குழந்தை செல்வம் அனைவருக்கும் இழகுவில் கிடைத்து விடுவதில்லை,ஒரு சிலருக்கு ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் கிடைகப்படுகிறன. ஒரு சிலருக்கு ஒரு குழந்தை கூட இல்லாத நிலையும் காணப்படுகின்றது.குழந்தை கிடைப்பதென்பது இறைவனின் அருட்கொடை என்று தான் குறிப்பிட வேண்டும்.

இந்நிலையில் தான் பெண் ஒருவர் மூன்று குழந்தைகளை பிரசவித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகள் பிறந்துள்ளன.

மூன்று குழந்தைகளும் சுகப்பிரசவமாக பிறந்துள்ளதாகத் வைத்தியசாலை வட்டாரம் தெரிவித்துள்ளது.

மகப்பேற்று விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அப்புத்துரை சிறிதரன் தலைமையிலான மருத்துவக் குழுவினரே குறித்த சுகப்பிரசவத்தை மேற்கொண்டிருந்தனர்.

குறித்த மூன்று குழந்தைகளும் நலமாக பிறந்துள்ளதுடன் தாயும் குழந்தைகளும் நலமாக உள்ளனர் என வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.

இக்குழந்தைகளை பெற்ற தாயும் பெரும் அதிஷ்டசாலிதான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *