பவதாரணி பூதவுடல் சொந்த ஊருக்கு ..!

இசைஞானி இளையராஜாவின் மகளும் பின்னணிப் பாடகியுமான பவதாரிணி இலங்கையில் நேற்று காலமானார் .

47 வயதான இவர் புற்று நோய் காரணமாக சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி காலமானார்.இவர் தமிழ் ,தெலுங்கு,கன்னடம்,இந்தி ஆகிய மொழிகளில் பல பாடியுள்ளார்.

இதே வேளை மறைந்த பின்னனி பாடகி பவதாரணி அவர்களின் பூதவுடலை பார்வையிட அவரின் சகோதரரும் பிரபல இசையமைப்பாளருமான யுவன் சங்கர் ராஜா ,இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் தமிழ் திரையுலகின் பலர் இன்று காலை இலங்கை வந்தடைந்திருந்தனர்.

இதனையடுத்து இன்று மாலை விமானம் மூலம் இந்தியாவிற்கு பவதாரணி அவர்களின் பூதவுடல் எடுத்து செல்லப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *