அதிக வெப்பமான கால நிலை ஆரம்பம்…!

இன்றைய தினம் முதல் இலங்கைக்கு மேல் நேரடியாக சூரியன் உச்சம் கொடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் பலப் பகுதிகளில் வெப்பநிலை அதிகமாக காணப்படும் எனவும் குறிப்பிடப்படுகிறது.

எதிர்வரும் 07 ஆம் திகதி வரை இந்த காலநிலை தொடரும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இன்றைய தினம் மதியம் 12.11 மணியளவில் கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியனின் உச்சம் மிகவும் அதிகமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக இந்த 10 நாட்களிலும் மிகவும் அவதானமாக இருக்குமாறு பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் அதிகளவில் நீரினை அருந்துமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.மற்றும் நீர் சத்து நிறைந்த பழங்களையும் உட்கொள்வதன் முலம் உடலில் ஏற்படும் நீர் இழப்பினை குறைத்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *