வானிலையில் திடீர் மாற்றம் ஏற்பட போகிறது..!

பிரார்த்தனைகள் என்றும் வீண்போவதில்லை என்ற ஒரு கூற்று உள்ளது. அதற்கமைய பல்வேறு பிரதேசங்களில் மழை வேண்டி இறைவனிடம் பிரார்த்தனைகள் முன்வைக்கப்பட்டது .அதற்கு செவி சாய்த்தாட் போல் எதிர்வரும் நாட்களில் மழையுடனான வானிலை தொடரக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் மழையுடனான வானிலை எதிர்பார்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என அந்த திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு தெரிவித்துள்ளது.

ஊவா மாகாணம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம், மக்களைக் கோரியுள்ளது.

இதேவேளை, நாளை தொடக்கம் செப்டெம்பர் 7ஆம் திகதி வரை சூரியன் இலங்கைக்கு அண்மித்த அட்சரேகைகளுக்கு மேல் நேரடியாக உச்சம் கொடுக்கும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை நண்பகல் 12.11 மணிக்கு கோவிலன் முனை மற்றும் மல்லாகம் ஆகிய பகுதிகளில் சூரியன் உச்சம் கொடுக்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

மழையின்மையால் பல்வேறு பிரதேசங்களில் நீர்பற்றாக்குறை நிலவுகிறது. நீர் இன்மையால் நீண்ட தூரம் சென்று தான் மக்கள் நீரைப்பெற்றுக்கொள்கின்றனர். இதனால் மக்களின் அன்றாட வாழ்வில் பெரும் கஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடதக்கது.

இதே வேளை சிறுபோக அறுவடை செய்யும் நாட்களில் மழையின்மையால் வயல் நிலங்கள் காய்ந்து சேதமடைந்துள்ளன. இதன் காரணமாக விவசாயிகள் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளனர்.இவ்வாறான சூழ்நிலையில் மழை வர இருக்கின்றமையானது மண்ணில் மாத்திரமல்ல மக்களின் மனங்களிலும் குளிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்று குறிப்பிடலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *