அலஸ்கா பகுதியில் நில நடுக்கம்.

அமெரிக்காவின் அலஸ்கா பகுதியில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.7.2ரிச்டர் அளவில் உணரப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இன்று காலை சாண்ட் பொய்ன்ட் நகருக்கு தென்மேற்கே 89கிலோ மீட்டர் தொலைவில் 32.6 கிலோ மீட்டர் ஆழத்தில் கடற்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நில அதிர்வின் காரணமாக கட்டிடங்கள் குழுங்கியதாகவும் மக்கள் கட்டிடங்கள்,வீடுகள் என்பவற்றை விட்டு வெளியேறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதே வேளை அலஸ்கா பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதும் பின்னர் டுவிட்டர் மூலம் வாபஸ் பெறப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *