தமிழ்த்தின போட்டியில் இரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி மகத்தான சாதனை படைத்துள்ளது…!

மத்திய மலை நாட்டில் கண்டி மாவட்டத்தில் இரஜவெல்ல நகரில் அமைந்திருக்கும் இரஜவெல்ல இந்து தேசிய கல்லூரி பல அறிவாரந்த மாணவச்செல்வங்களை சமூகத்திற்கு வழங்கியுள்ளது. அதன் சாதனைகள் சொல்லில் அடங்காது.

இந்த வகையில் மேலும் சாதனைகளை படைத்துள்ளது. அண்மையில் நடைப்பெற்ற வலய மட்டத்திலான தமிழ்தின போட்டியில் 25 நிகழ்ச்சிகளில் பங்கு பற்றி ,24 போட்டிகளில் வெற்றி பெற்று,18 முதலாம் இடங்களை தன்வசப்படுத்தியுள்ளது. இதில் நடனத்தில் 5 முதலாம் இடங்களையும் ,சங்கீதத்தில் 3 முதலாம் இடங்களையும் தனதாக்கி கொண்டுள்ளது.

நடனத்திற்கு தனுஜா ஆசிரியையும்,சங்கீததிற்கு சுபாகரன் ஆசிரியரும் முன்னின்று மாணவர்களின் வெற்றிக்கு அரும்பாடுபட்டவர்கள். மேலும் அனைத்து ஆசிரியர்களும் ,அதிபரும்,மாணவர்களும்,பெற்றோரும் இதில் பெரும் பங்குவகிக்கின்றனர்.

தொடர்ந்தும் பல சாதனைகளுக்காக காத்திருக்கின்றனர் மாணவச்செல்வங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *