சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) ஆண்களுக்கான கிரிக்கெட்| புதிய தலைவராக சௌரவ் கங்குலி

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஐசிசி யின் ஆண்களுக்கான கிரிக்கெட் புதிய தலைவராக , சௌரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார் என ICC அறிவித்துள்ளது.

ஏற்கனவே 2012 முதல் தலைவராக இருந்த அனில் கும்ப்ளே தொடர்ச்சியாக 9 ஆண்டுகள் , முன்று தடவைகளாக தலைவராக இருந்து அவரது காலம் நிறைவடைந்த நிலையில் சௌரவ் கங்குலி அந்த இடத்துக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் தலைவராக இருந்த சௌரவ் கங்குலி, பின்னர் நிர்வாகக்கட்டமைப்புகளிலும் பொறுப்புவாய்ந்த பதவிகள் வகித்துவந்தவர்.தற்சமயம் BCCI தலைவராகவும் செயற்பட்டு வருகிறார்.அதனடிப்படையில் அவரது அனுபவம் ஐசிசி ஆண்களுக்கான கிரிக்கெட் தலைவராகவும் திறம்பட செயற்பட ஏதுவாக அமையும் என ஐசிசியின் தலைவர் Greg Barclay தெரிவித்துள்ளார்.

அதேவேளை பெண்களுக்கான கிரிக்கெட் நிர்வாகக்கட்டமைப்பின் தலைவராக மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட்டின் தலைவர் Jhonny நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.