உலக கிண்ண இறுதிப் போட்டியில் இந்திய அவுஸ்திரேலிய அணிகள் பலபரீட்சை..!

2023 ம் ஆண்டு உலக கிண்ண போட்டியின் இறுதிப் போட்டி இன்றைய தினம் இந்தியாவின் அகமதபாத்தில் அமைந்துள்ள நரேந்திரமோடி மைதானத்தில் இடம்பெறுகிறது.

இப்போட்டியானது இந்தியா அவுஸ்திரேலுய அணிகளுக்கிடையில் இடம் பெறுகிறது.

இவ் உலக கிண்ண போட்டிகளில் இந்திய அணி 9 வெற்றிகளைப்பெற்று வலுவான நிலையில் அவுஸ்திரேலிய அணியை எதிர்தாடுகிறது.

இந்த ஆண்டு உலக கிண்ணத்தை இந்திய அணி சுவீகரிக்கும் என பரவாலாக பேசப்படுகிறது.

இதே வேளை உலக கிண்ண இறுதி போட்டியில் அவுஸ்திரேலிய அணி விளையாடுவது 8 வது தடவையாகும்.இதில் 5 முறை அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை சுவீகரித்து சென்றுள்ளது. 2003ஆம் ஆண்டு இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இறுதி போட்டியில் பல பரீட்சை நடத்தின.இதில் அவுஸ்திரேலிய அணி கிண்ணத்தை சுவீகரித்து சென்றது. அப்போது அவுஸ்திரேலிய அணி,உலகின் பலம் வாய்ந்த அணியாக காணப்பட்டது.

இதே வேளை இந்திய அணி 3 உலக கிண்ண இறுதி போட்டியில் விளையாடி 2 முறை கிண்ணத்தை சுவீகரித்து சென்றது.

எவ்வாறாயினும் இன்றைய இறுதி போட்டி கிரக்கெட் ரசிகர்களுக்கு ஒரு விறுவிறுப்பான போட்டியாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *