தேசியமட்ட உதைபந்தாட்டம்| மகாஜனாக் கல்லூரி பெண்கள் அணி சாம்பியன்

இலங்கை பாடசாலைகள் உதைபந்தாட்டச் சம்மேளனத்தால் 18 வயதுப் பெண்கள் அணிகளுக்கிடையில் தேசிய மட்டத்தில் நடாத்தப்பட்ட உதைபந்தாட்டத்தில் மகாஜனாக்கல்லூரி பெண்கள் அணி  சாம்பியனாகியுள்ளது.

குறித்த இப்போட்டிகளின் இறுதிப்போட்டி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை 09.03.2024 அன்று நடைபெற்றது.


இறுதிப்போட்டியில் களுத்துறை சென். ஜோன் கல்லூரி அணியை எதிர்கொண்ட மகாஜனாக்கல்லூரி அணி  3:0 என்ற கோல்கள் கணக்கில் அபாரமாக விளையாடி  வெற்றிபெற்று சாம்பியனாகியது.


ஆட்டத்தின் முதலாவது பாதியாட்டத்தில் 1:0 என்ற கோல்கணக்கில் முன்னிலை வகித்த மகாஜனாக்கல்லூரி , இரண்டாவது பாதியாட்டத்திலும் அதீதமாக பலமாக ஆடியது.

இரண்டாவது பாதியாட்டத்தில் இரு கோல்களை மேலதிகமாகப் பெற்று வெற்றியை உறுதிசெய்தது. மகாஜனா கல்லூரி சார்பில் தரணிகா 2 கோல்களையும் சஸ்மி 1 கோலையும் அணிக்காக பெற்றுக்கொடுத்தனர்.

கடந்த வருடங்களிலும் மகாஜனா கல்லூரி பெண்கள் அணியினர் தேசியரீதியில் சம்பியன்களாகி வெற்றிபெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *