250 மீட்டர் சுரங்க பகுதி தாக்கி அழிப்பு..!

ஹிஸ்புல்லா இராணுவத்தின் சுரங்கத்தை தாக்கி அழித்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. லெபனானின் தெற்கே அமைந்துள்ள சுரங்கத்தின் 250 மீட்டர் பகுதியை தகர்த்தி விடடோம் என்று இஸ்ரேல் இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.

இதுப்பற்றி இஸ்ரேல் இராணுவத்தின் எக்ஸ் வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளனர்.இந்த சுரங்கத்தினுள் சமையலறை,வசிக்கும் இடம்,போருக்கு பயன் படுத்தும் பைகள்,குளிர்சாதன பெட்டி மற்றும் சில பொருட்கள் இருந்தன.

ஹிஸ்புல்லா இராணுவத்தின் ரத்வான் படைகள் இஸ்ரேலுக்குள் படை எடுக்க பயன்படுத்துவதற்காக இந்த சுரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை நேற்று இஸ்ரேல் இராணுவத்தினர் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு கழகம் இணைந்து நடத்திய தாக்குதலில் லெபானானில் ஹமாஸ் போராளிகளின் முக்கிய உறுப்பினராக செயற்பட்டு வந்த முஹமது உசைன் அலி அல் மஹ்முத் என்பவர் உயிரிழந்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகிறது.

மேலும் நேற்றிரவு லெபனானின் திரிபோலி பகுயில் மற்றுமோர் தாக்குதலை இஸ்ரேல் நடத்தியுள்ளது இதன் போது ஹமாஸ் போராளிகளின் இராணுவ பிரிவின் மூத்த உறுப்பினரான அலா நயீப் அலி என்பவர் உயிரிழந்துள்ளார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *