இவர்களுக்கு தேச துரோக வழக்கு..!

ரஷ்ய உக்ரைன் போரானது இரண்டு வருடங்களுக்கு மேலாக நடைப்பெற்று வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் இற்கு அமெரிக்காவானது உதவிகளை செய்து வருகிறது.

இந்நிலையில் உக்ரைன் உளவு பிரிவின் கேர்னல் பதவி வகித்து வந்த இரு அதிகாரிகள் ரஷ்யாவிற்கு இராணுவ உளவு தகவல்களை வழங்கியுள்ளதாகவும்,உக்ரைன் ஜனானதிபதி ஜெலன்ஸ்கியை கொலைசெய்ய சதிதிட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இவர்கள் இருவருக்கும் ரஷ்ய நாட்டு குடியுரிமை,பலகோடி பணம்,பெண்கள் ஆகியவை பேரமாக பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் தகவல்களை வெளியிட்டுள்ளது.

இவர்கள் இருவருக்கும தேச துரோக வழக்கு பதியப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *