4வது தடவையாக ஏவுகணை சோதனை நடத்தியது வடகொரியா..!

வட கொரியாவானது 4வது தடவையாக ஏவுகணை சோதனையை இன்று நடாத்தியுள்ளது.

வட கொரியாவின் நப்ஹொ நகரில் கப்பல் கட்டும் பணிகள் நடைப்பெற்று வருகின்றது. இதனை வடகொரியா ஜனாதிபதி பார்வைவிட்டு ஆய்வு செய்து சில மணி நேரத்தின் பின் ஏவுகணை சோதனை நடாத்தியுள்ளது வடகொரியா.

வடகொரியா ஏவிய பல ஏவுகணைகள் தென்கொரியா கடற் பகுதியில் விழுந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தென் கொரியாவிற்கு அமெரிக்கா ஆதரவு தெரிவித்து வரும் நிலையில் தான் இந்த ஏவுகணை சோதனை நடாத்தி வருகிறது.

தனது நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் தாம் தாக்குதல் நடத்துவோம் என வடகொரியா எச்சரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக கொரிய தீப கற்பத்தில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *