பெட்ரோல் ஏற்றி சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளானதில் 94 பேர் உயிரிழப்பு..!

பெட்ரோல் ஏற்றி சென்ற கனரக வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.இதன் போது 94 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவம் ஆனது நைஜீரியாவில் இடம் பெற்றுள்ளது.நைஜீரியாவின் ஜிகாவா பகுதியில் குறித்த வாகனம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்த வேளை சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.விபத்து ஏற்பட்ட பின் பெட்ரோல் கசிந்து வெளியாகியுள்ளது.இதன் போது மக்கள் குழுமி பெட்ரோலை எடுத்துள்ளனர்.இதனையடுத்து கனரக வாகனம் தீப்பிடித்து எரிந்துள்ளது.

இதனையடுத்து பொதுமக்கள் 94 பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் 50பேர் காயமடைந்துள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.மேலும் காயங்களுக்கு உள்ளானவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *