சீனாவில் 1 டன் எடையை ஏற்றிச்செல்லும் ஆளில்லா சரக்குவிமானம் முதல் பயணம்

சீனாவில் ஒரு டன் எடையை ஏற்றிச்செல்லக் கூடிய பெரிய ரக ஆளில்லா சரக்குவிமானம் தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவேற்றியது.
சீனாவின் ஷாண்டோங் மாகாணத்தின் (Shandong Province) கிங்டாவோவில் (Qingdao) உள்ள லைக்ஸி டியான்பு (Laixi Dianbu) விமான நிலையத்தில் சனிக்கிழமை- 15 தனது முதல் பயணத்தை நிறைவு செய்தது,
3.3 டன் எடையுடைய TP1000 என்ற ஆளில்லா சரக்குவிமானம், ஒரு டன் எடையுடைய சரக்குகளைத் தாங்கும் திறன் கொண்ட நிலைமையில், 1000 கிரோமீட்டர் தூரப் பயணத்தை நிறைவேற்ற முடியும். தற்போது விரைவாக வளர்ந்து வரும் குறைந்த உயரத்தில் சரக்கு போக்குவரத்து தேவையை இது நிறைவு செய்யும்.
டி.பி.1000 சரக்குவிமானம், 2026ஆம் ஆண்டில் செயல்பாட்டுக்கு வரும் என்று கூறப்படுகிறது.