பதிவுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட கட்டுப்பணம் செலுத்திய ஜெர்மனி பெண்

மாத்தளை மாவட்டத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஜெர்மனி நாட்டவர் ஒருவர் வைப்புத்தொகை செலுத்தியுள்ளார்.

அந்தப் பெண் இலங்கை குடியுரிமையைப் பெற்றுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறித்த ஜெர்மனி பெண் ஒரு சுயேச்சைக் குழுவிலிருந்து கலேவல பிரதேச சபைக்கு வேட்பாளராக போட்டியிட உள்ளார்.

வைப்புத்தொகை செலுத்திய பின்னர், இலங்கையில் மாற்றங்களைக் கொண்டு வரும் நம்பிக்கையுடன் தான் போட்டியிடுவதாக குறித்த பெண் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *