வாகனப் புகை கண்டறிதலுக்கு சி.சி.டி.வி. கேமராக்கள்: புதிய நடவடிக்கை!

அளவுக்கு அதிகமாகப் புகை வெளியேற்றும் வாகனங்களைக் கண்டறிவதற்கும், குற்றவாளிகளுக்கு எதிராக முறையான நடவடிக்கை எடுப்பதற்கும் பொலிஸ் சி.சி.டி.வி. கமராக்களைப் பயன்படுத்துவது குறித்து மோட்டார் போக்குவரத்து திணைக்கள கேட்போர் கூடத்தில் கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க, தகவல் தொழில்நுட்ப ஆணையாளர், வாகனப் புகை வெளியேற்ற நம்பிக்கை நிதியத்தின் (Vehicle Emissions Trust Fund) பணிப்பாளர் மற்றும் பொலிஸ் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
வாகனப் புகை வெளியேற்றத்தால் ஏற்படும் அதிகரித்து வரும் சுகாதார, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க, வாகனப் புகை வெளியேற்ற நம்பிக்கை நிதியம் ஏற்கனவே பல உத்திகளைச் செயல்படுத்தி வருகிறது.