அநுராதபுரத்தில் பலத்த காற்றால் முச்சக்கரவண்டி திஸ்ஸ வாவிக்கு வீச்சு

அநுராதபுரம் திஸ்ஸ வாவிக்கு அருகில் நேற்று (27) இடம்பெற்ற பலத்த காற்று காரணமாக, வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று நேரடியாக வாவிக்குள் தூக்கி வீசப்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது வண்டியில் எவரும் இல்லாததால் பேரழிவு தவிர்க்கப்பட்டது. இதனை அவதானித்த பிரதேசவாசிகள் மற்றும் உயிர்காப்பு பிரிவினர் உடனடியாக செயல்பட்டு முச்சக்கரவண்டியை நீரில் இருந்து மீட்டு கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இத்தகைய வானிலை மாற்றங்களுக்காக பொது மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர்.