ஆங்காங்கே நடைபெறும் குற்றங்களை தடுக்க விஷேட துரித-பிரதிவினை பொலிஸ் மோட்டார் சைக்கிள் பிரிவு ஆரம்பம்!

தென் மாகாணத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்கள் மற்றும் துப்பாக்கி வன்முறைகளுக்கு துரிதமாக பதிலளிக்கும் வகையில், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் கித்சிறி ஜயலத் தலைமையில் விசேட மோட்டார் சைக்கிள் பிரிவு ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த பிரிவு, குற்றங்களில் இருந்து தப்பிச் செல்லும் சந்தேக நபர்களை, குறிப்பாக துப்பாக்கிகள் சம்பந்தப்பட்ட சம்பவங்களில், விரைவான பதில் மிகவும் அவசியமான நிலையில், அவர்களை விரைவாக கண்டறிந்து கைது செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அண்மையில், முக்கிய குற்றச் செயல்களில் ஈடுபட்ட பல சந்தேக நபர்கள் தலைமறைவான குறுகிய காலத்திலேயே கைது செய்யப்பட்டதாக வெளியான செய்திகளை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய பிரிவில் 23 மோட்டார் சைக்கிள்கள் – தங்காலை மற்றும் மாத்தறை பிரிவுகளில் இருந்து 8 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 15 நெடுஞ்சாலை ரோந்து மோட்டார் சைக்கிள்கள் – மற்றும் சுமார் 46 அதிகாரிகள் பணியாற்றுகின்றனர்.
அதிகாரிகளுக்கான உத்தியோகபூர்வ விளக்கமளிப்புக் கூட்டம் 2025 மே 26 அன்று மாத்தறை மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
