யானை தாக்குதலில் முதியவர் உயிரிழப்பு – சம்பூர் கணேசபுரம்

திருகோணமலை மாவட்டம் சம்பூர் பொலிஸ் பிரிவில் உள்ள கணேசபுரம் பகுதியில், 2025 மே 30, வெள்ளிக்கிழமை காலை, முதியவர் ஒருவர் யானை தாக்குதலால் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் மூதூர்-கட்டைபறிச்சான் பகுதியைச் சேர்ந்த சிவக்கொழுந்து இராசரெத்தினம் (வயது 75) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தனது வயலில் குருவிக் காவலுக்குச் சென்று திரும்பும் போது, கணேசபுரம் பிரதான வீதியில் யானை தாக்கியதாக சம்பூர் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.