பதிவுகள்

அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என ஜனாதிபதி கோரிக்கை

அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உங்களது ஒவ்வொரு ரூபாவையும் பாதுகாப்போம்” இவ்வாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

தேசிய வரி வாரத்தின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

மோசடியால் கட்டமைக்கப்பட்ட கறுப்புப் பொருளாதாரத்தை அகற்றப்படும். பொது நிதியைப் பாதுகாக்க ஒரு சட்ட மற்றும் பொறுப்புணர்வு அமைப்பு நிறுவப்படும்.

பொதுமக்களின் ஒவ்வொரு ரூபாயும் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்வதற்காக ஜனாதிபதியாக தனது சொந்த செலவினங்கள் முடிந்தவரை குறைக்கப்பட்டுள்ளன.

வரிப் பணம் முழுமையாகப் பாதுகாக்கப்படும். யாராவது அதைத் தவறாகப் பயன்படுத்தினால். சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.”அனைத்து குடிமக்களும் வரி செலுத்த வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். ஒவ்வொரு ரூபாயையும் பாதுகாப்போம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *