பதிவுகள்

கணவன் மனைவிக்கிடையே தகராறு – வவுனியாவில் கொடூர சம்பவம்

மனைவியின் கழுத்தை அறுத்து கையில் எடுத்துக்கொண்டு பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ள சம்பவமொன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புளியங்குளம், நொச்சிக்குளம்- அனந்தர்புளியம்குளம் பகுதியை 32 வயதுடைய சேர்ந்த ஆரம்பப்பிரிவு பாடசாலை ஆசிரியை ஒருவரே கொல்லப்பட்டுள்ளார்.

இன்று (03) காலை புளியங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு தனது மனைவியின் தலையை எடுத்துக் கொண்டு வந்த கணவன், மனைவியை கொலைசெய்து, நயினாமடு காட்டுக்குள் வீசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவந்துள்ளதாவது,

மானிப்பாயை சொந்த இடமாக கொண்ட கணவன், குறித்த ஆசிரியையுடன் காதல் திருமணம் செய்துள்ளார்.

ஆனால், ஆசிரியை இளைஞன் ஒருவருடன் தொடர்பில் இருந்ததாக கணவன் குற்றம்சாட்டி தகராறில் ஈடுபட்டு வந்த நிலையில் சில நாட்களுக்கு முன் இருவர் பேசி தீர்த்துவிட்டு சுமுகமாக இருந்துள்ளனர்.

இந்நிலையில், ஆசிரியையுடன் தொடர்பிலிருந்ததாக கூறப்பட்ட இளைஞன், இருவரும் நெருக்கமாக இருந்த புகைப்படங்களை கணவனுக்கு அனுப்பியுள்ளனர். இதனால் ஆத்திரம் தாங்காத கணவன், மனைவியின் சகோதரனிடமும் இதை கூறியுள்ளார்.

பின்னர், இந்த விவகாரத்தை பொலிஸ் நிலையத்தில் தீர்த்துக்கொள்ளலாம் என கூறி, மனைவியை அழைத்துச் சென்றுள்ளார்.

அவ்வேளையில், நயினாமடு காட்டுப்பகுதியில் மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்த பின்னர், கழுத்தை வெட்டி, பிளாஸ்ரிக் பையில் வைத்து, புளியங்குளம் பொலிஸ் நிலையம் சென்றுள்ளார்.

தனது மனைவியை கொன்று நயினாமடு காட்டில் வீசியுள்ளதாக அவர் தெரிவித்ததையடுத்து, பொலிஸார் சடலத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *