செய்திகள்

போப் பிரான்ஸிஸ் ஆண்டகை வைத்தியசாலையிலிருந்து வெளியேறியுள்ளார்..!

போப் பிரான்ஸிஸ் ஆண்டகை வைத்தியசாலையில் இருந்து வெளியேறியுள்ளார்.

நிம்மோனியா பாதிப்பால் ஜெம்மெலி மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில் குணமடைந்து வெளியேறியுள்ளார்.

88 வயதான போப் பிரான்ஸிஸ் கடந்த பெப்பரவரி மாதம் 14ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டு ரோம் நகரிலுள்ள ஜெமெல்லி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தற்போது அவராகவே எழுந்து கோப்பி குடிப்பது,உணவு எடுத்துக்கொள்வது,பத்திரிகை வாசிப்பது உட்பட சில அன்றாட பணிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *