இவை எல்லாம் நீங்கள் பார்த்ததுண்டா..?

பருவங்கள் எத்தனையோ
வந்து வந்து போகிறது
தாய்ப் பாலில் உடல் வளர்த்து
தளர் நடையில் நடை பயின்று
விளையாடக் கற்கையிலே
வசந்த காலம் வருகிறது …!

கொட்டாங்குச்சியில் மண் நிரப்பி
கோழி மொட்டுப் போடுவதும் ,
கிட்டிபுள்ளடித்து கிரிக்கெட்
விளையாடுவதும் …!

கண்பொத்தி , கண்மறைந்து
கண்டுபுடி ஆடியதும் ..!

குளம் குட்டை
நீர் தேடி குதித்தாடி மகிழ்வதுவும் …!

பட்டாம்பூச்சிகள் பிடித்து பறக்க
விட்டு ரசித்ததுவும் …!

மயிலிறகை
புத்தகத்தில் குட்டி போட மறைத்ததுவும் …!

பொன்வண்டுகள்
பிடித்து பொத்திப் பொத்தி வளர்ததுவும் …!

வாழக் கொடுத்து வைத்த சந்ததிகள்
நாங்கள் …!

இன்றைய தலைமுறைக்கு
எதைச் சொல்ல …!

கைபேசியில்
முகம் புதைத்து …!

கண் வரண்டு
போகின்றனரே பாவம் …!

கே.பி.எஸ்.ராஜாகண்ணதாசன் ,
கருக்கம்பாளையம் ,
பிச்சாண்டாம்பாளையம் – 638052

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *