குதிரையுடன் புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணிற்கு நடந்த விடயம்..!

விலங்குகளுடன் நின்று புகைப்படம் எடுப்பது என்பது சிலருக்கு அலாதி பிரியம்.

இவ்வாறான நிலையில் குதிரையுடன் இணைந்து புகைப்படம் எடுக்க முயன்ற பெண்ணை குதிரை யானது கடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இங்கிலாந்தில் பக்கிங்ஹாம் மாளிகை மற்றும் செய்ன்ட் ஜேம்ஸ் மாளிகை ஆகியவற்றை பார்வையிட ஆயிரகணக்கான சுற்றுலா பிரயாணிகள் வருவதுண்டு.இந்நிலையில் குறித்த மாளிகையின் முன்னால் பாதுகாப்புகளும் மேற்கொள்ளப்பட்டுவருகிறது.இந்நிலையில் வெஸ்ட் மின்ஸ்டர் பகுதியில் குதிரை படை காவல் படையினர் அணிவகுத்து இருந்தனர்.

இத்தருணத்தில் சுற்றுலா பிரயாணி ஒருவர் ஆசை கொண்டு குதிரையுடன் இணைந்து புகைப்படம் எடுத்துள்ளார் .இதன் போது குதிரையை தனது கைகளால் தொட்டுள்ளார் .இதன் காரணமாக கோபம் அடைந்த குதிரை குறித்த பெண்ணை கடித்து தள்ளியுள்ளது. இதன் காரணமாக குறித்த பெண் கீழே விழுந்துள்ளார்.இதன் போது குறித்த பெண்ணிற்கு பலர் உதவி செய்தனர்.

எனினும் குதிரைகளை தொட வேண்டாம் என பதாதைகளும் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *