பல பகுதிகளுக்கு மின் துண்டிப்பு

வானிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் பல பகுதிகளில் பாதுகாப்புக் கருதி மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



இந்நிலையில், வெள்ளத்தால் பாலம் சேதமடைந்ததால் அவிசாவளைக்கும் வகவுக்கும் இடையிலான,

ரயில் சேவைகள் முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.



இதேவேளை, நாட்டின் சில பகுதிகளுக்கு இன்றைய தினம்  அதிகமழை தொடர்பான சிவப்பு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



அதன்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 150 மில்லிமீட்டருக்கு அதிக மழை வீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதே அதிக மழையுடனான சமயங்களில் வெளியில் செல்வதை தவிர்க்கவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *