மழையுடனான வானிலை குறையும்..!

எதிர்வரும் சில நாட்களில் படிப்படியாக மழை குறையும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.



அத்துடன் தென்மேற்கு பருவமழை மே மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்

இந்நாட்களில் மழை குறைந்தாலும் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் வரை மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.



மேலும் இவ்வாறான பலத்த மழை பெய்தால், முன்னறிவிப்பு தொடர்பில் முன்கூட்டியே அறிக்கை வெளியிடப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *