ஜனாதிபதி தேர்தலில் இறங்குவது உறுதி – விஜயதாஸ ராஜபக்ஷ சொல்கிறார் 

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தான் நிச்சயமாக போட்டியிடுவேன் என்கிறார் நீதிஅமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ.

நடைமுறையில் உள்ள வழக்கு நடவடிக்கைகள் சிலவற்றின் தீர்வுகள் கிடைத்த பின்னர் உரிய தீர்மானங்கள்  மேற்கொள்ளப்படும் என்று அவர் குறிப்பிடுகிறார்.

இதேவேளை  தாம் அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதாக கூறப்படும் கருத்தை மறுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டிருக்கிறார்.
அதேவேளை அரசாங்கத்தின் ஹம்பாந்தொட்டை கூட்டங்களில் பங்கேற்றதாக கூறப்படும் கருத்து பொய்யானது என்று மேலும் குறிப்பிட்டார்.

உண்மையில் சுதந்திர கட்சி பிளவுபடவில்லை எனவும் இரண்டு மூன்று பேர் கட்சியை விட்டு விலகிச் சென்று அரசாங்கத்தின் கூட்டங்களில் பங்கேற்றுள்ளதாக மைத்திரி மேலும் குறிப்பிடுகிறார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *