குவைத் கட்டடத்தில் பயங்கர தீ| உயிரிழந்தோர் பலர் இந்தியர்

குவைத்தில் கட்டடம் ஒன்றில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில்  பலியானோர் எண்ணிக்கை ஐம்பதை (50)   தாண்டி சென்று கொண்டிருக்கிறது.


அதேவேளை 40 க்கும் மேற்பட்ட இந்தியர்கள் குறித்த விபத்தில் சிக்கி
உயிரிழந்திருப்பதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.


குறித்த கட்டடமானது தொழிலாளர்கள் வாழும் முகாமாகிய மங்காஃப் முகாம்  எனவும் சொல்லப்படுகிறது.
கூடுதலான உயிரிழப்புகள் தீ விபத்தினால் ஏற்பட்ட புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி ஏற்பட்டன என்றும் தெரிவிக்கப்படுகிறது.


அதிகாலை நான்கு மணிக்கு ஏற்பட்ட இந்த தீவிபத்தினால் ஒரே நிறுவனத்தில் பணிசெய்யும் தொழிலாளர்கள் பலர் உயிரிழந்தும்,  உயிருக்காக போராடியும் வருகின்றனர்.

குறித்த கட்டட முதலாளி மற்றும் காவலாளிகளை கைது செய்யுமாறு குவைத்தின் உள்துறை அமைச்சர் ஷேக் ஃபகத் அல் யூசப் அல் சபா உத்தரவிட்டுள்ளார் என்றும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *