எசல பெரஹெரவை முன்னிட்டு விசேட போக்குவரத்து ..!

கண்டி எசல பெரஹெராவை முன்னிட்டு விசேட போக்குவரத்து வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த ஏற்பாடு எதிர் வரும் 14 ம் திகதி முதல் 19ம் திகதி வரை இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கமைய கண்டி மாவட்டத்தை உள்ளடக்கிய 438 பேருந்துகள் சேவையில் ஈடுப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அனுராதபுரம்,பொலனறுவை,குருநாகல்,கேகாலை,கொழும்பு,கம்பஹா,நாவலப்பிட்டி ,கம்பளை,போன்ற பிரதேசங்களில் இருந்து 100 மேலதிக பேருந்துகள் சேவையில் ஈடுப்படவுள்ளது.

எசல பெரஹெரவை முன்னிட்டு மக்களின் நலன் கருதி குறித்த பேருந்துகள் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *