பாடசாலை மீது வான்வெளி தாக்குதல்..!

இஸ்ரேலானது பொது மக்கள் தஞ்சமடைந்திருந்த பாடசாலை மீது வான்வெளி தாக்குதல் மேற்கொண்டுள்ளது.

கிழக்கு காஸாவின் தராஜ் மாவட்டத்திலுள்ள பாடசாலை மீதே குறித்த தாக்குதலை இஸ்ரேலானது மேற்கொண்டுள்ளது.

இதன் காரணமாக இங்கு தங்கியிருந்த 100 பேர் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்துள்ளனர்.காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டு முதல் இஸ்ரேலானது பாலஸ்தீனத்தின் மீது தாக்குதல் நடத்திவருகிறது. மேலும் நீர்,உணவு,மின்சாரம்,மருத்துவம் அத்தியவசிய சேவைகள் என அனைத்தையும் இடைநிறுத்தியது. இந்த போரால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஹமாஸ் போரிகளை அடியோடு அழித்துக்கட்டுவோம் என குறிப்பிட்டு இஸ்ரேலானது பாலஸ்தினத்தின் மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *