எப்போது தேர்தல் முடிவுகள் வெளியாகும்..!

தொகுதிவாரியான தேர்தல் முடிவுகளை இன்று நள்ளிரவு 12.00மணிக்கு முன்பதாக வெளியாகும் என தெரிவிக்கப்படுகிறது.இது தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்னாயக்க கருத்து தெரிவித்துள்ளார்.

இதன் போது கருத்து வெளியிட்ட அவர் இன்று இரவு 8.00 மணி முதல் 9.00மணிக்குள் வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எதிர்பார்ப்பதாக தெரிவித்துள்ளார்.

அனைத்து வாக்கு பெட்டிகளும் கிடைத்த பின்னர்,வாக்குகளை எண்ணும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மேலும் தெரிவித்துள்ளார்.

இதே வேளை தபால் மூலம் எண்ணப்படும் வாக்குகள் மாலை 4.00 மணிக்கு ஆரம்பமாகும் என மேலும் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *