இஸ்ரேல் மீது வான்வழி தாக்குதல்..!

ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது 200க்கும் மேற்பட்ட ரொக்கெட்டுக்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.இந்த ரொக்கெட்டுக்களை இஸ்ரேலானது வானில் தடுத்து அழித்துள்ளதாக இஸ ரேல் தெரிவித்துள்ளது.இஸ்ரேலின் ரமத் டேவிட் விமானபடைத்தளம்,நாசரேத் ,மஹிடோ விமானபடைத்தளம்,ஹைபா,ஹப்லா போன்ற இடங்களை இலக்கு வைத்து இந்த வான்வெளி தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தடுத்து அழித்தப்படியால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

நேற்றைய தினம் இஸ்ரேலானது லெபனான் மீது தாக்குதல் நடத்தியிருந்தது. இதன் போது 492 பேர் உயிரிழந்துள்ளனர்.இந்த தாக்குதலுக்கு பதிலி கொடுக்கும் முகமாக ஹிஸ்புல்லா அமைப்பினர் தாக்குதல் நடத்தியுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகிறது.

பாலஸ்தீன இஸ்ரேல் போர் நடைப்பெற்று வருகிறது .இதில் லெபனானை தலைமையிடமாக கொண்டியங்கும் ஹிஸ்புல்லா அமைப்பினர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவு தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *