இனிய தொரு புன்னகை..!
திருமண நாள் மலரும் நினைவுகள் !
அன்று பார்த்து புன்னகைத்த நீ
இன்றும் அதே புன்னகையில்!
உன்னைப் பெற
நான் தவம் செய்யாமலே
நீ எனக்கு கிடைத்த வரம் !

உன் அன்பான அரவணைப்பில்
என் தாயாய்
நீ மடி மீது தாலாட்டுகிறாய்
உன் அன்பைக் காட்டி!
இனியதொரு புன்னகைப் பூவாய்
மங்களகரமான
அந்நாள்
என் வாழ்வில் எழுச்சி நாள் !
சுபமுகூர்த்த நாள் !இன்றும்
என் வாழ்வில்
சுகமான சுகமாய்
இனிய நினைவாய்
நெஞ்சில் இனிக்கிறது!
இரம்ஜான் எபியா சென்னை