இலங்கைஇலங்கைசெய்திகள்செய்திகள்-இலங்கை

அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (CID) கைது செய்யப்பட்டுள்ளார்.

கரடியனாறு அரச புலனாய்வுப் பிரிவில் கடமையாற்றும் மாவட்ட புலனாய்வுப் பிரிவின் கான்ஸ்டபிள் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

2018 ஆம் ஆண்டு, வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான கொலைகள் தொடர்பான விசாரணையில், கைது செய்யப்பட்ட காவல்துறை அதிகாரி தவறாக நடந்து கொண்டது தெரியவந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *