செய்திகள்

ஷேக் ஹசினாவிற்கு எதிராக பிடியாணை பிறப்பிப்பு..!

பங்களதேசத்தின் முன்னால் பிரதமர் ஷேக் ஹசினாவிற்கு எதிராக பங்களதேஸ் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

டாக்காவின் புறநகர் பகுதியான புர்பாச்சலில் வீட்டு மனை ஒன்றை மோசடி செய்து வாங்கியது தொடர்பாக ஷேக் ஹசீனா அவரது மகள் சைமா வாஜித் புதுல் மற்றும் 17 பேருக்கு எதிராக டாக்கா பெரு நகர நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.இதனை ஊழல் தடுப்பு ஆணைக்குழு விசாரித்து நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

ஷேக்ஹசினாவின் மகள் சைமா புதிய நகர வீட்டு வசதி திட்டத்தில் சட்ட விதிகளை மீறி வீட்டு மனையை பெற்றதாகவும் இதற்கு ஷேக் ஹசீனா தனது பதவியை தவறாக பயன்படுத்தினார் என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஷேக் ஹசினா மற்றும் அவரது மகள் ஆகியோர் தலைமறைவாகியிருப்பதால் இவர்களுக்கு எதிராக நேற்று பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *