சதுரங்க விளையாட்டிற்கு தடை விதிப்பு..!
சதுரங்க விளையாட்டிற்கு ஆப்கானிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பாக விளையாட்டு துறை செய்தி தொடர்பாளர் அடல் மஷ்வானி கருத்து தெரிவித்துள்ளார்.
“இஸ்லாமிய ஷரியாவின் கீழ் சதுரங்கம் சூதாட்டத்தின் ஒரு வழிமுறையாக கருதப்படுகிறது.இது நன்மையை ஊக்குவித்தல் மற்றும் தீமையை தடுப்பதற்கான சட்டத்தின் படி தடை செய்யப்பட்டுள்ளது.சதுரங்க விளையாட்டிற்கு மத ரீதியான ஆட்சேபனைகள் உள்ள நிலையில் அது தீர்க்கப்படும் வரை ஆப்கானிஸ்தானில் இந்த விளையாட்டு நிறுத்தி வைக்கப்படும்”என்று அவர் தெரிவித்துள்ளார்.

இந்த அறிவிப்பானது சதுரங்க ஆர்வலர்கள் மற்றும் இது தொடர்புடைய வணிகங்கள் மத்தியில் பெரும் அதிர்ப்தியை உண்டு பண்ணியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.