செட்டிபாளையம் கண்ணகி அம்மன் திருசடங்கு கதவு திறத்தலுடன் ஆரம்பம்

மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகியம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு உற்சவம் வெள்ளிக்கிழமை (06) முன்னிரவு கதவு திறத்தலுடன் ஆரம்பமாகியது. இவ்வாலயத்தின் உற்சவம் நாளை மறுதினம் திங்கட்கிழமை (9) பின்னிரவு இடம்பெறும் திருக்குளிர்த்திச் சடங்குடன் நிறைவு பெறவுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை (6) முன்னிரவு கிராங்குளம் மக்களின் அனுசரணையில் கதவு திறத்தலும், சனிக்கிழமை (7) பகற்சடங்கு குருக்கள்மடம் கிராம மக்களின் அனுசரணையிலும், சனிக்கிழமை (7) இரவுச்சடங்கு மாங்காடு கிராம மக்களின் அனுசரணையிலும், ஞாயிற்றுக் கிழமை (8) பகல் கலியாணச் சடங்கு தேற்றாத்தீவு கிராம மக்களின் அனுசரணையிலும், ஞாயிற்றுக் கிழமை (8) இரவு பூரண கும்பச் சடங்கு செட்டிபாளையம் கிராம மக்களின் அசரணையிலும், திங்கட்கிழமை (9) பகற்சடங்கும், திங்கட் கிழமை (9) பின்னிரவு திருக்குளிர்த்திச் சடங்கும் களுதாவளைக் கிராம மக்களின் அனுசணையிலும் நடைபெறவுள்ளது.
நாளை ஞாயிற்றுக் கிழமை (9) கும்பச் சடங்கிற்குரிய நெல் குடியிருப்பு கிராம மக்களால் ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்டு . சடங்கு காலங்களில் பாரம்பரிய முறைப்படி கண்ணகையம்மன் வழக்குரை படித்தல் நடைபெற உள்ளது
திங்கட் கிழமை (9) பின்னிரவு 3.30 மணிக்கு அம்மனுடைய உள்வீதி வலம் வந்து திருக்குளித்தி நடைபெறும்.
இவ் திருச்சடங்கினை ஆலய பிரதம கட்டாடி சிவஸ்ரீ க.கு தேவராஜா குருக்கள் மற்றும் உதவி கட்டாடி சிவஸ்ரீ க.கு ருதுகரன் ஆகியோரினால் நிகழ்த்தப்பட உள்ளது.






