கிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் லண்டனில் இன்று – மருத்துவ கலாநிதி சத்யமூர்த்தி பிரதம அதிதி

மிகப்பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லண்டன் கிளிநொச்சி மக்களின் ஒன்றுகூடல் நிகழ்வு இன்று மாலை லண்டன் Harrow, Byron hall மண்டபத்தில் நடைபெறவுள்ளது.கடந்தவாரம் லண்டனுக்கு வருகை தந்த கலாநிதி திரு சத்யமூர்த்தி அவர்கள் முள்ளிவாக்காலில் மக்களின் சொல்லணாத் துயரங்களின்போது தன் தோள் கொடுத்து சேவைபுரிந்த வைத்தியர் ஆவார். அவரின் வருகை நிகழ்ச்சிக்கு பெருமையும் உத்வேகமும் அளித்திருப்பதாக ஒன்றுகூடலில் பங்குபெற்றவுள்ள மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிகழ்வை இத்தனை பிரமாண்டமாக ஏற்பாடு செய்துள்ள கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு  (Kili People , தங்கள் Mission For Education திட்டத்தின் கீழ் நடைபெறுகின்ற கிளிநொச்சி மாணவர்களிற்கான  துவிச்சக்கரவண்டிகள் வழங்கும் திட்டத்தில், இவ்வருடம்  500 இற்கும் மேற்பட்ட  துவிச்சக்கரவண்டிகள் வழங்கப்பட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *