நோர்வே சாவகச்சேரி இந்து  பழைய மாணவர்களின் 20வது ஆண்டுவிழா

யாழ்,தென்மராட்சி  சாவகச்சேரி இந்துக்கல்லூரி  நோர்வே வாழ் பழைய மாணவர்கள் சங்கத்தின் 20 வது ஆண்டு விழா கொண்டாட்டம் நோர்வே ஒஸ்லோவில் இடம்பெறவுள்ளது.

நிகழ்ச்சியின் பிரதம விருந்தினராக அண்மையில் ஐக்கிய இராச்சிய அரசரால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்ட கலாநிதி சபேசன் சிதம்பரநாதன் கலந்துகொண்டு சிறப்பிக்கவுள்ளார்.


அதேபோல இந்த நிகழ்ச்சியின்  கௌரவ விருந்தினராக தொழிலதிபர் திரு சற்குணமாறன் வேலுப்பிள்ளை அவர்களும் கலந்து கொண்டு சிறப்பிப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியின் விசேட நிகழ்ச்சியாக free birds இசைக்குழுவினர் பங்குகொள்ளும் இசை நிகழ்ச்சி இடம்பெறவுள்ளது. அவர்களோடு இணைந்து  லண்டனிலிருந்து  சிவானுஜன் மற்றும்  வாரகி சிவகுமாரன் ஆகியோரின் வீணை புல்லாங்குழல் இசை நிகழ்ச்சியும் இடம்பெறவுள்ளது
வெற்றிகரமாக இருபது ஆண்டுகள் தொடர்ச்சியாக இயங்கி பல பங்களிப்புகளை மேற்கொண்டுவரும் நோர்வே சாவகச்சேரி பழைய மாணவர்கள், இந்தவருடமும் சிறப்பாக  கொண்டாடி வரும் பங்களிப்புகளை கல்லூரியின் செயற்றிட்டங்களுக்காக முன்னெடுக்க ஆதரவை வேண்டி நிற்கிறார்கள்.
நிகழ்ச்சி பற்றிய முழுமையான விடயங்களை கீழே உள்ள படத்தில் காணலாம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *