பெரிய இலக்கை துரத்தி அடித்து கொல்கத்தாவை வென்றது பஞ்சாப்

IPL தொடரின் இன்றைய 42 வது போட்டி அதிரடி ஆட்டத்திற்கு பஞ்சமில்லாத ஆட்டமாக, Kolkata Knight Riders அணியை Punjab Kings அணி 8 பந்துகள் மீதமிருக்க வென்று அசத்தியுள்ளது.


Kolkata ஈடன் கார்டின் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற பஞ்சாப் அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.


அதன்படி துடுப்பெடுத்தாடிய கல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 261 ஓட்டங்களைக்குவித்தது.
ஆட்டத்தில் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான Phil Salt மற்றும் Sunil Narine ஆகியோர் 40க்கு உட்பட்ட பந்துகளில் 75 மற்றும் 71 ஓட்டங்களைக் குவித்தனர்.

தொடர்ந்து களமிறங்கிய பஞ்சாப் அணி , 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து, வெற்றி இலக்கை 18.4 ஓவர்களில் எட்டியது.
ஆட்டத்தில் ஆகக்கூடுதலாகவும் வேகமாகவும்  48 பந்துகளில் 108 ஓட்டங்களை Jonny Bairstow உம்,
28 பந்துகளில் 68 ஓட்டங்களை Shashank Singh உம், 20 பந்துகளில் 54 ஓட்டங்களை Prabhsimran Singh உம் பெற்றுக்கொண்டனர்.

விறுவிறுப்பான அதிரடியான ஆட்டமாக கலைத்து அடித்து பஞ்சாப் அணி வெற்றொபெற்றிருக்கிறது.
ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக அதிரடி ஆட்டத்தில் கூடுதல் ஓட்டங்களைப்பெற்ற பஞ்சாப் அணியின் Jonny Bairstow தெரிவு செய்யப்பட்டார்.


கடந்த நான்கு போட்டிகளிலும் தோற்றிருந்த பஞ்சாப் அணி , அதிரடி ஆட்டத்தோடு வெற்றியைப் பதிவுசெய்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *