அபார பந்துவீச்சும் களத்தடுப்பும்|சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

IPL தொடரின் இன்றைய போட்டியில் சண்ரைஸ் ஹைதராபாத் அணியை அபாரமாக களத்தடுப்போடு பந்துவீச்சி சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி வெற்றிபெற்றுள்ளது.

சென்னை சிதம்பரம் மைதானத்தில் இடம்பெற்ற 46 போட்டியில் 6 பந்துகள் மீதமொருக்க 78 ஓட்டங்களால் அபார வெற்றியை பதிவுசெய்தது சென்னை சூப்பர் கிங்க்ஸ்.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற சண்ரைசேர்ஸ் அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்தது.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய சூப்பர் கிங்ஸ்   அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்து 212 ஓட்டங்களைக் குவித்தது.
ஆட்டத்தில் அணித்தலைவர் Ruturaj Gaikwad 54 பந்துகளில் 98 ஓட்டங்களைக்குவித்தார்.

அதன்படி தொடர்ந்து களமிறங்கிய சண்ரைசேர்ஸ் அணி ஆரம்பத்திலிருந்து விரைவு ஆட்டத்தை துவங்கியிருந்தாலும் விக்கெட்டுக்களையும் இழந்துகொண்டிருந்தது.
அதன்படி 18.5 ஓவர்களில் 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

பந்துவீச்சில் அதிகபட்சமாக , Tushar Deshpande 3 ஓவர்கள் பந்துவீசி 27 ஓட்டங்களைக்கொடுத்து 3 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தார்.

இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக , நின்று நிலைத்தாடி ஆகக்கூடிய ஓட்டங்களைக்குவித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவர் Ruturaj Gaikwad அறிவிக்கப்பட்டார்.

இன்றைய போட்டியின் அபார வெற்றியைத்தொடர்ந்து Chennai Super Kings அணி , அணித்தரவரிசையில் மூன்றாம் இடத்திற்கு முன்னேற , Sunrisers Hyderabad அணி நான்காம் இடத்திற்கு பின்தள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *