ரோயல் சலஞ்சேர்ஸ் நான்கு  விக்கெட்டுக்களால் வெற்றி

IPL தொடரின் இன்றைய போட்டியில் ரோயல் சலஞ்சேர்ஸ் பெங்களுர் அணி , குஜராத் ரைற்றன்ஸ் அணியை நான்கு விக்கெட்டுக்களால் தோற்கடித்து வெற்றிபெற்றது.

தொடரின் 52 வது போட்டியாக இடம்பெற்ற இந்தப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற ரோயல் சலஞ்சேர்ஸ் அணி முதலில் பந்துவீசத் தீர்மானித்தது.

அதன்படி துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய குஜராத் ரைற்றன்ஸ் அணி ஆரம்ப ஓவர்களில் இருந்து ஓட்டங்களை எடுக்கத் தடுமாறியது.
மிகச்சிறந்த பந்துவீச்சாலும் களத்தடுப்பாலும் பெங்களூர் அணி களத்தில் ஆதிக்கமாக இருந்தது. அதன்படி குஜராத் அணி 19.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 147 ஓட்டங்களை எடுத்தது.

தொடர்ந்து களமிறங்கிய பெங்களுர் அணி ஆரம்பத்திலிருந்து ஆதிக்கத்தை நிலைநாட்டியது. முதல் விக்கெட்டுக்காக 92 ஓட்டங்களை எடுத்து 6 வது ஓவரில் முதல் விக்கெட்டை இழந்ததும்,  வெற்றி இலக்கை அடையும் வரை 6 விக்கெட்டுக்களை இழந்தது.
வெற்றி இலக்கை  38 பந்துகள் மீதமிருக்கும் போது அடைந்து வெற்றிபெற்ற ரோயல் சலஞ்சேர்ஸ் அணி , அணித்தர வரிசையிலும் ஏழாம் இடத்திற்கு முந்தியிருக்கிறது.

ஆட்டத்தின் ஆட்ட நாயகனாக ஆரம்ப ஓவர்களில் குஜராத் அணியை பந்துவீச்சால் திணறடித்த Mohammed Siraj தெரிவுசெய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *