IPL இல் வியாஸ்காந்த் களமிறங்கிய  முதற்போட்டி|சண்ரைஸ் இன்று  அபார வெற்றி

IPL தொடரின் இன்றைய போட்டியில் வியாஸ்காந்த் தனது முதல் Ipl போட்டியொன்றில் ஆடிய பெருமையைப் பெற்றுள்ளார். சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணியின் பதினொருவர் அடங்கிய விளையாடும் அணியில் உள்ளீர்க்கப்பட்ட வியாஸ்காந்  பந்துவீச்சில் சிறப்பாக தன் திறனை வெளிப்படுத்தியிருந்தார்.


இந்தப்போட்டியில் சண்ரைசேர்ஸ் ஹைதராபாத் அணி லக்னோ சுப்பர் ஜியன்ற்ஸ் அணியை பத்துவிக்கெட்டுக்களால் அதிவேகமாக ஓட்டங்களை அடித்து அபார வெற்றிபெற்றுள்ளது.

நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோவ் அணி துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
அதன்படி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை  இழந்து 165 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
ஆட்டத்தில் ஆகக்கூடுதலாக Ayush Badoni 30 பந்துகளில் 50 ஓட்டங்களைக்குவித்தார்.

தொடர்ந்து களமிறங்கிய சண்ரைசேர்ஸ் அணி வெறும் 9.4 ஓவர்களில் வெற்றி இலக்கை எட்டியது. ஆட்டத்தில் அதிவேகமாக Travis Head , 30 பந்துகளில் 89 ஓட்டங்களைக்குவித்தார். அதேபோல Abhishek Sharma , 28 பந்துகளில் 75 ஓட்டங்களைக்குவித்தார்.


அதிவேகமாக ஆட்டத்தால், கூடிய ஓட்டங்களைப் பெற்ற Travis Head ஆட்ட நாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.
இன்றைய போட்டியில் தனது கன்னி IPL போட்டியில் ஆடிய எங்கள் மண்ணின் வியாஸ்காந், 4 ஓவர்களும் பந்துவீசி 27 ஓட்டங்களை மாத்திரமே கொடுத்து சிறப்பாக தனது திறனை வெளிப்படுத்தியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *