டெல்கி அணி கடைசி ஓவரில் வென்றது| குஜராத் அணிக்கு  துரதிஷ்டம்

IPL தொடரின் இன்றைய போட்டியில் டெல்லி அணி,  குஜராத் அணியை  கடைசி ஓவரில் வெற்றிபெற்றது.


ARUN Jaitley மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய 40 வது போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற குஜராத் டைட்டன்ஸ் அணி ,டெல்லி கப்பிட்டல்ஸ் அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.


அதன்படி , முதலில் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி , நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களை எடுத்தது.
அணித்தலைவர் Rishabh Pant கடைசிவரை ஆட்டமிழக்காது 43பந்துகளில் 88 ஓட்டங்களைக்குவித்தார்.


தொடர்ந்து களமிறங்கிய குஜராத் அணி விரைவாக அடித்தாடியிருந்தாலும் 20 ஓவர்களில்  8 விக்கெட்டுக்களை இழந்து 220 ஓட்டங்களை மாத்திரமே எடுக்கமுடிந்தது. அதன்படி துரதிஷ்டவசமாக வெறும் 3 ஓட்டங்களால் இந்தப்போட்டியில் தோல்வியைத்தழுவியது குஜராத் அணி.
இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாக நாயகனாக,  டெல்லி அணியின் தலைவர் Rishabh Pant அறிவிக்கப்பட்டார்.


டெல்லி அணி இந்த வெற்றிக்காக அபாரமாக களத்தடுப்பில் ஈடுபட்டு திறமையை வெளிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *