லக்னோவ் அணி வென்றது|சென்னை இன்றும் தோற்றது

IPL போட்டித்தொடரின் இன்றைய 34வது போட்டியில் லக்னோவ் சுப்பர் ஜயன்ற்ஸ் அணி , சென்னை சுப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட்டுக்களால் வெற்றிபெற்றது.


லக்னொவ் Ekana Spots city மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற லக்னோவ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.


முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட்டுக்களை இழந்து 176 ஓட்டங்களை எடுத்திருந்தது.
ஆகக்கூடுதலாக ஜடேஜா ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 57 ஓட்டங்களை எடுத்திருந்தார்.


தொடர்ந்து களமிறங்கிய லக்னோவ் அணி ஆரம்பம் முதலே மிதப்பதாக ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தது.
19 ஆவது ஓவர்கள் நிறைவின் போது இரண்டு விக்கெட்டுக்களை மாத்திரமே இழந்து 180 ஓட்டங்களைக்குவித்து லக்னோவ் அணி வெற்றியைப்பதிவு செய்தது.
லக்னோவ் அணியின் அணித்தலைவரும் விக்கெட் காப்பாளருமான கே எல் ராகுல் 53 பந்துகளில் 82 ஓட்டங்களை விளாசியிருந்தார்.


அதனடிப்படையிலும் களத்தடுப்பில் இரண்டு பிடிகளை எடுத்திருந்த நிலையிலும் ராகுல் இன்றைய போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவு செய்யப்பட்டார்.


இன்றைய போட்டியின் தோல்வியினால் இன்றைய நாள் சென்னையில் அணித் தர வரிசைப்பட்டியலில் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை எனினும், அடுத்து வரும் போட்டிகளில் ஏனைய அணிகள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால், சென்னைக்கு வாய்ப்புக்கள் குறைவடையலாம் என்றும் கிரிக்கெட் அவதானிகள் எதிர்வுகூறகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *