அதிரடியாக வென்ற  ராஜஸ்தான் ரோயல்

IPL 2024 போட்டிகளில் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ரோயல் அணி அதிரடியாக வெற்றிபெற்றது.
கொல்கத்தா ஈடன்கார்டின் மைதானத்தில் இடம்பெற்ற இன்றைய போட்டியில் கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் அணியுடன் இடம்பெற்ற போட்டியில் கடைசிப்பந்தில் இந்த வெற்றியைப் பெற்று புள்ளிநிலைப்பட்டியலில் முதலிடத்தை தொடர்ந்தும் தக்க வைத்துள்ளது.


நாணயச்சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் ரோயல் களத்தடுப்பிற்காக களமிறங்கியது. முதலில் துடுப்பெடுத்தாடிய கொல்கத்தா நைட் ரைடேர்ஸ் 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 223 ஓட்டங்களைக் குவித்தது. தொடர்ந்து களமிறங்கிய ராஜஸ்தான் கடைசிப்பந்தில் வெற்றி இலக்கைத்தொட்டு 8 விக்கெட்டுக்களை இழந்து 224 ஓட்டங்களைப் பெற்று வெற்றி பெற்றது.


கொல்கத்தா அணி சார்பில் 56 பந்துகளில் 109 ஓட்டங்களைக்குவித்த நரைன் அணிக்கு வலுவான ஓட்ட எண்ணிக்கையை பெற்றுக்கொடுத்தார்.
அதேபோலவே ராஜஸ்தானுக்காக  ஜோஸ் பட்லர் ஆட்டமிழக்காமல் 60 பந்துகளில் 107 ஓட்டங்களை குவித்து அணியை வெற்றியை நோக்கி நகர்த்தியிருந்தார்.


அதனடிப்படையில் பட்லர் இன்றைய ஆட்ட நாயகனாகவும் தெரிவுசெய்யப்பட்டார்.
இன்றைய வெற்றியுடன் மொத்தமாக 7போட்டிகளில் விளையாடிய ராஜஸ்தான் 6 போட்டிகளில் வெற்றிபெற்று 12 புள்ளிகளுடன் முதன்னிலையை தக்கவைத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *