பஸ்ஸுடன் மோதிய முச்சக்கரவண்டி..!

பதுளை புவக்கொடமுல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த விபத்தில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தெஹியத்தகண்டிய டிப்போவிற்கு சொந்தமான இலங்கை போக்குவரத்து சொந்தமான பேருந்தொன்றும்,

முச்சக்கரவண்டியொன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.

விபத்து நடந்த பகுதிக்கு அருகில் உள்ள வளைவில் குடிநீர் குழாய் பராமரிப்புக்காக ஒரு வழிப்பாதை அடைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த வீதியில் பயணித்த முச்சக்கரவண்டியொன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து எதிர் திசையில் பயணித்த பேருந்துடன் மோதி கவிழ்ந்தது.

இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதோடு, நால்வர் காயமடைந்துள்ளனர்.

விபத்தையடுத்து பேருந்தின் சாரதியை கைது செய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *