பாவனைக்கு தகுதியற்ற அரிசி கண்டுபிடிப்பு..!

ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசி மனித பாவனைக்குத் தகுதியற்றதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

நுகர்வோர் அதிகாரசபையின் அனுராதபுரம் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு இலட்சத்து எழுபதாயிரம் கிலோகிராம் அரிசியை 08 லொறிகள் மூலம் தனியார் அரிசி ஆலைக்கு,

கொண்டு சென்று மீண்டும் பொதி செய்து கொண்டிருந்த போதே இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அரிசியின் பொதிகளில் எழுதப்பட்ட திகதி கடந்த 30ஆம் திகதி காலாவதியாகியிருந்த நிலையில் காலாவதித் திகதி அடுத்த 30 நாட்களுக்கு செல்லுபடியாகும் வகையில் மாற்றியமைக்கப்பட்டது.

அத்துடன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கான இலவச அரிசி வழங்கும் திட்டத்திற்கு இந்த அரிசியை,

அரசாங்கம் பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் நுகர்வோர் அதிகார சபையினால் கையகப்படுத்தப்பட்ட அரிசி கையிருப்பு சீல் வைக்கப்பட்டுள்ளதுடன்,

அரிசி ஆலையின் உரிமையாளரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *